‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
மலையாள திரை உலகில் 40 ஆண்டுகளாக நடிகர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருபவர் நடிகர் சீனிவாசன். இவரும், நடிகர் மோகன்லாலும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். நிஜத்திலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான். இருந்தாலும் நடிகர் சீனிவாசன் அவ்வப்போது வெளிப்படையாக பேசுகிறேன் என சில விஷயங்களை தனது பேட்டிகளில் பேசி விடுவது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் பேசிய பேட்டி ஒன்றில் அந்த சமயத்தில் மறைந்த ஒரு இயக்குனர் பற்றி பேசும்போது அவருக்கு மோகன்லால் உரிய நேரத்தில் கால்சீட் தராமல் இழுத்தடித்தார் என்பது போன்று ஒரு தகவலை கூறினார். இது அப்போது மலையாள திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அப்போதுதான் உடல் நலக்குறைவால் சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு குணமடைந்து வந்ததால் நடிகர் சீனிவாசன் இப்படி பேசிய கருத்துக்கு பதிலடியாக யாரும் அவருக்கு பதில் அளிக்கவில்லை. அவரது மூத்த மகனும் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசன் கூட தன் தந்தை ஏன் இவ்வாறு பேசினார் என்று தெரியவில்லை என்றும் அவரது பேச்சு தனக்கு வருத்தம் அளித்ததாகவும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அப்படியே உல்டாவாக சீனிவாசனின் இளைய மகனும் நடிகரும், நயன்தாரா நடித்த லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவருமான தயன் சீனிவாசனின் சர்ச்சை பேச்சுக்கு அவரது அம்மா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் மலையாள திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த படப்பிடிப்பில் போதைப் பொருள் புழக்கம் குறித்து ஒரு கருத்தை கூறியிருந்தார் தயன் சீனிவாசன்.
அதாவது டினி டாம் என்கிற குணச்சித்திர நடிகர் மலையாள திரையுலக படப்பிடிப்பு தளங்களில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதால் தன் மனைவி தனது மகனை சினிமாவில் நடிக்க அனுமதிக்க மறுக்கிறார் என ஒரு தகவலை கூறினார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக தயன் சீனிவாசன் அளித்த பேட்டி ஒன்றில், யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி போதை பொருளை திணிக்க முடியாது.. அவரவர்களுக்கு நல்லது கெட்டது என்பது தெரியும் தானே” என்று ஒரு பதில் கொடுத்திருந்தார்.
இவர் இது போன்ற அவ்வப்போது பேட்டிகளில் சர்ச்சையாக பதில் கூறி விமர்சனங்களுக்கு ஆளாவது வழக்கம் தான். இந்த நிலையில் இவரது அம்மா விமலா சீனிவாசன் தன் மகனது இந்த சுபாவம் குறித்து கூறும்போது சில நேரங்களில் எதார்த்தமாக பேசுகிறேன் என கூறி தனது மகன் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார் என்றும், அவரது பேச்சு சில நேரங்களில் எனக்கே வருத்தம் அளிப்பதாக இருக்கும் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இப்படி தந்தையின் பேச்சுக்கு மூத்த மகன் வருத்தம் தெரிவித்ததும் இளைய மகனின் பேச்சுக்கு தாய் வருத்தம் தெரிவித்ததும் திரை உலகில் அபூர்வமான ஒரு விஷயமாக தான் தெரிகிறது.