இந்த வாரம், மூன்றே படங்கள் ரிலீஸ் | பொறுப்புணர்வு இல்லாமல் கேட்பது மன்னிப்பு அல்ல: கவுரி கிஷன் | ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சத்துடன் கூடிய 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்த படத்தில் கதாநாயகனாக 'பிரேமலு' புகழ் நடிகர் நஸ்லேன் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் சமமாக இன்னொரு முக்கியமான வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் சாண்டி நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். அவரது முதல் படமே கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்திருப்பதும் அவரது கதாபாத்திரத்திற்கு மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதும் அவரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் சாண்டி கூறும்போது, “இந்த படத்தில என்னுடைய கதாபாத்திரம் நிஜமான ஒரு சைக்கோ போன்றது தான். இந்த படப்பிடிப்பில் நடிக்கும்போதெல்லாம் எனது வீட்டிற்கு செல்வதையே தவிர்த்தேன். வீட்டாருடன் போனில் பேசுவதைக் கூட தவிர்த்தேன். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் என்னை தொந்தரவு செய்தது. இதற்கு முன்பு லியோ படத்தில் நடித்தபோதும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்பதால் அப்போதும் இதேபோல தான் வீட்டிற்கு செல்லாமல் வீட்டாருடன் பேசாமல் அந்த படப்பிடிப்பில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.




