தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் உமன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' என்கிற திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களே ஆன நிலையில் சுமார் 250 கோடி வசூலித்து மலையாளத்தில் இதற்கு முன்பு மோகன்லாலின் 'தொடரும், எல் 2 எம்புரான்' மற்றும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஆகிய படங்கள் செய்திருந்த வசூல் சாதனையை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது.
டொமினிக் அருண் என்பவர் இயக்கிய இந்த படத்தை நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். இப்போது வரை தியேட்டர்களை படம் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் இந்த படம் ஓடிடியில் ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியாக இருக்கிறது என்று மீடியாவில் ஒரு செய்தி கடந்த இரண்டு நாளாக பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள துல்கர் சல்மான், “இப்போதைக்கு விரைவில் லோகா திரைப்படம் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இல்லை. அதனால் சோசியல் மீடியாவில் வெளியான செய்திகளை நம்ப வேண்டாம். அது குறித்து நேரம் வரும்போது நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த இந்தப் படத்துடன் வெளியான மோகன்லாலின் ஹிருதயபூர்வம் மற்றும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' ஆகிய படங்கள் வரும் வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லோகா திரைப்படம் இன்னும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் எட்டு வாரம் கழித்தே ஓடிடியில் ஒளிபரப்பாகும் என்று சொல்லப்படுகிறது.