வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
மம்முட்டி நடித்து முடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். அடுத்து ஸ்படிகம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2023ம் ஆண்டின் முதல் படத்தை அவர் அறிவித்துள்ளார்.
இது மம்முட்டி தயாரிக்கும் 4வது படம். இந்த படத்தை ஒளிப்பதிவாளர் ராபி வர்க்கீஸ் ராஜ் இயக்குகிறார். படத்திற்கு ஷாபி திரைக்கதை அமைக்கிறார், ரோனி டேவிட் ராஜ் வசனம் எழுதுகிறார். முகமது ரஹில் ஒளிப்பதிவு செய்கிறார். சுஷின் ஷியாம் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
இது ஒரு துப்பறியும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். படத்தின் துவக்க விழா நடந்தது. இதில் மம்முட்டி கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் கருப்பு சட்டையுடன் கலந்து கொண்டது பற்றிய விவாதங்கள் தொடங்கி உள்ளது.