மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்சன் ஹீரோ பைஜு என்கிற படம் வெளியானது. அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நிவின்பாலியே தயாரித்திருந்தார். வழக்கமான போலீஸ் படங்களில் இருந்து மாறுபட்டு ரொம்பவே எதார்த்தமான பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலமாக, பல புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகினர். சமீபத்தில் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அப்படி இந்த படத்தில் கிளைமாக்ஸில் நிவின்பாலியுடன் மோதும் முரட்டு வில்லனாக நடித்து இருந்தவர் என்.டி பிரசாத். இந்த படத்தின் மூலம் ஓரளவு பிரபலமான இவர் அதற்கடுத்து சில படங்களிலும் நடித்தார். இந்தநிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருட்களை பயன்படுத்தினார் என இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. வழக்குகளின்ன் தீவிரம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.