நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடித்த ஆக்சன் ஹீரோ பைஜு என்கிற படம் வெளியானது. அப்ரிட் ஷைன் என்பவர் இயக்கிய இந்த படத்தை நிவின்பாலியே தயாரித்திருந்தார். வழக்கமான போலீஸ் படங்களில் இருந்து மாறுபட்டு ரொம்பவே எதார்த்தமான பாணியில் உருவாகியிருந்த இந்த படத்தின் மூலமாக, பல புதுப்புது நடிகர்கள் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகினர். சமீபத்தில் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அப்படி இந்த படத்தில் கிளைமாக்ஸில் நிவின்பாலியுடன் மோதும் முரட்டு வில்லனாக நடித்து இருந்தவர் என்.டி பிரசாத். இந்த படத்தின் மூலம் ஓரளவு பிரபலமான இவர் அதற்கடுத்து சில படங்களிலும் நடித்தார். இந்தநிலையில் இவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில்தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் சினிமாவில் நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருட்களை பயன்படுத்தினார் என இவர் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. வழக்குகளின்ன் தீவிரம் மற்றும் மன அழுத்தம் காரணமாக இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.