ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி மூவரும். இதில் சுரேஷ்கோபி இடையில் அரசியலில் நுழைந்து, நடிப்பை விட்டு ஒதுங்கினாலும் தற்போது மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக பல நிகழ்வுகளில் இவர்கள் மூவரும் ஒன்றாக கலந்து கொண்டாலும் கொரோனா தாக்கத்திற்கு பிறகான இந்த இரண்டு வருடங்களில் தற்போது தான் மீண்டும் முதன்முறையாக ஒன்று கூடியுள்ளனர்.
நேற்று முன்தினம் சுரேஷ்கோபியின் பிறந்தநாள் என்பதுடன் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாலும் இந்த அதிசய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. பொதுக்குழு கூட்டத்திலேயே சுரேஷ்கோபியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மோகன்லாலும் மம்முட்டியும் இதுகுறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சுரேஷ்கோபி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.