'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மலையாள திரையுலகில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி மூவரும். இதில் சுரேஷ்கோபி இடையில் அரசியலில் நுழைந்து, நடிப்பை விட்டு ஒதுங்கினாலும் தற்போது மீண்டும் பழையபடி சுறுசுறுப்பாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக பல நிகழ்வுகளில் இவர்கள் மூவரும் ஒன்றாக கலந்து கொண்டாலும் கொரோனா தாக்கத்திற்கு பிறகான இந்த இரண்டு வருடங்களில் தற்போது தான் மீண்டும் முதன்முறையாக ஒன்று கூடியுள்ளனர்.
நேற்று முன்தினம் சுரேஷ்கோபியின் பிறந்தநாள் என்பதுடன் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாலும் இந்த அதிசய சந்திப்பு நிகழ்ந்துள்ளது.. பொதுக்குழு கூட்டத்திலேயே சுரேஷ்கோபியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மோகன்லாலும் மம்முட்டியும் இதுகுறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் சுரேஷ்கோபி. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.