'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். அந்நாட்டில் வாழவும் வேலை செய்யவும் முடியும். பத்து வருடங்களுக்குப் பிறகு விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இந்த விசாவை மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான், சுராஜ் வெஞ்சரமூடு, நடிகைகள் , மீரா ஜாஸ்மின், அமலாபால், உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். இந்த வரிசையில் தற்போது நடிகர் திலீபுக்கு கோல்டன் விசா வழங்கி உள்ளது அமீரகம்.
திலீப் மீது பிரபல நடிகையின் பாலியல் பலாத்கார வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் அவர் சிறை செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திலீபுக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி இருப்பது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அமீரகத்தின் கோல்டன் விசா என்பது அந்த நாடு அளிக்கும் கவுரவம் ஆகும். அப்படி இருக்கும்போது பாலியல் குற்றச்சாட்டில் இருக்கும் ஒருவருக்கு எப்படி வழங்கப்பட்டது என்பது குறித்து அதிருப்தி நிலவுகிறது.