ஆந்திர தேசமே எதிர்பார்த்து காத்திருந்த பவன் கல்யாணின் 'சர்தார் கப்பார் சிங்' படம் மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகி வந்தது. எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டத்தை தொடர்ந்து வெளிவந்திருக்கும் படத்தை பார்றி பார்க்கலாம்.
பவன் கல்யாண் ஒரு அதிரடி போலீஸ். தனது கட்டுபாட்டு எல்லைக்குள் இல்லதா போதிலும் தவறு எங்கே நடந்தாலும் தட்டி கேட்கிற பவன் கல்யாண், ரத்தன்பூர் என்கிற கிராமத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறார். அந்த ஊர் ராஜாவான பைரவ் சிங்கின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஊரின் கனிம வளத்தை கொள்ளை அடிப்பதற்காக விவசாயம் செய்யவிடாமல் நிலத்தை அபகரித்து அட்டூளியம் செய்கிறார்.
அந்த ஊரின் இளவரசியினான் காஜல் அகர்வால், நாயகன் மீது காதல் கொள்கிறாள். சில திருப்பங்களுக்கு பிறகு, பவன் கல்யாண் தான் இந்த ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டதே இளவரசி குடும்பத்திற்கு பைரவ் சிங்கினால் ஏற்படும் பிரச்சனையை சரி செய்யவும் ஊர் மக்களை காப்பாற்றவும் என்பதை உணர்கிறார்.
அடுத்து என்ன துப்பாக்கி வெடிக்க, ரத்தம் தெறிக்க நரம்புகள் புடைக்க சண்டையிட்டு வசனம் பேசி எதிரிகளை வீழ்த்துகிறார் பவன் கல்யாண் இதுவே படத்தின் மீதிக்கதை. படத்தின் பலவீனம் என்று பார்த்தால், அதன் கதை தான் ரொம்ப பழைய கதையை கையில் எடுத்து அதற்கு தற்கால மசாலா திரைக்கதை அமைத்து உலாவ விட்டிருக்கிறார் பவன் கல்யாண்.
முதல் பாதையில் சின்ன சின்ன சுவாரஸ்யங்களுடன் செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் அடுத்து அடுத்து வரும் இரண்டு பாடல்களால் தடுமாறுகிறது. காஜல் மெலிந்து இளவரசியாக கண்களில் சின்ன சோகத்துடன் அழகாக வருகிறார். படத்தின் மிகப்பெரும் பலம் பவன் கல்யாண் மட்டும் தான், உடல்மொழி வசன் உச்சரிப்பு நடிப்பு என மொத்தமாக படத்தை தூக்கி சுமக்கிறார்.
அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்கள், விசில் அடிக்கிறார்கள், கைதட்டுகிறார்கள். எதை எதை திரைக்கதையில் எந்த இடத்தில் வைத்தால் ரசிகர்களை கவரலாம் என்று நன்கு உணர்ந்து காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இது ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம் என்று கூட சொல்லலாம்.
படத்தின் கலை இயக்கத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். இல்லாத ரத்தன்பூரை அழகாக வடிவமைத்து உண்மை போலவே காட்டியிருக்கிறார்கள். ஒளிப்பதிவையும், படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு நன்றாகவே ஒத்துழைத்திருக்கிறது. இசை தேவி ஸ்ரீ பிரசாத், முதல்பாதி பாடல்கள் காட்சிகளுடன் ஒன்றினாலும், இராண்டாம் பாதியில் வரும் பாடல்கள் நம் பொறுமையை சோதிக்கிறது. பின்னணி இசையில் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். மொத்தமாக சர்தார் கப்பார் சிங் பவன் கல்யாணின் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கி படம் தான் என்று தெரிகிறது. ஆக்ஷன் காட்சிகளை ஸ்டைலாக காட்சிப்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.
''சர்தார் கப்பார் சிங் - துப்பாக்கிகளும் தோட்டாக்களும்...!''