Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சினிமா சூபிஸ்தா மாவா (தெலுங்கு)

சினிமா சூபிஸ்தா மாவா (தெலுங்கு),cinema supista mava
  • சினிமா சூபிஸ்தா மாவா (தெலுங்கு)
திரினந்த ராவ் இயக்கியிருக்கும் படம் இது.
15 ஆக, 2015 - 14:35 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சினிமா சூபிஸ்தா மாவா (தெலுங்கு)

நாயகன் - ராஜ் தருண்

நாயகி - அவிகா கோர்

இயக்குநர் - திரினந்த ராவ்


டோலிவுட்டில் வெளிவந்த உய்யலா ஜம்பல படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த ராஜ் தருண் - அவிகா கோர் ஜோடி மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படம் தான் சினிமா சூபிஸ்தா மாவா. இப்படத்தில் இவர்களின் ஜோடி எவ்விதம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது என பார்ப்போம்..


சினிமா சூபிஸ்தா மாவா படத்தில் வேலையில்லாத வெட்டி இளைஞனாக நாயகன் ராஜ் தருண் ஊரைச் சுற்றி வருகிறார். அப்படி சுற்றி வரும் போது அழகான பெண் கண்டிப்பாக கண்ணில் பட வேண்டுமே அதுவும் நடக்கிறது. ஒரு பெங்காலி பெண்ணை பார்க்கிறார் (அவிகா கோர்). பார்ததும் காதலில் விழுகிறார். அவள் பின்னால் சுற்றி திரிந்து ஒரு வழியாக தனது காதலை ஏற்கவைக்கிறார் ராஜ் தருண். பின்னர் அவிகா அப்பாவின்(ராவ் ரமேஷ்) ரூபத்தில் பிரச்சனை வருகிறது. சதாரண பிரச்சனை தான். மகளின் காதலை அறியும் அவர் தருணுக்கு ஒரு சவால் விடுகிறார்.அந்த சவால் என்ன? தருண் ஏற்றுக்கொண்டாரா? காதல் கைகூடியதா ?? என்கிற பதிலை நம்மை சிரிக்கவைத்து சொல்கிறது திரைக்கதை.


இப்படியாக ராஜ் தருண் மற்றும் அவிகா கோர் என்ற வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்த சினிமா சூபிஸ்தா மாவா படத்தை இயக்கியிருப்பவர் திரினந்த ராவ். இவர் இப்படத்தில் நிறையவே நம்மை சிரிக்க வைக்கிறார்கள், படத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதியில் சில கதாபாத்திரங்களின் உணர்சிப்பூர்வமான காட்சிகள் படம் பார்ப்பவர்களையும் உணர்ச்சி வசப்பட வைத்துள்ளன.


ராஜ் தருண் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார். அதிலும் மூத்த நடிகர் ராவ் ரமேஷ் உடனான காட்சிகள் குறிப்பிடத்தக்கவை. அவிகா கோர் அழகாக இருக்கிறார், தருணுடன் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் அழகால் கிறங்கடிக்கின்றார். அவ்வளவு தான் இதை மீறி நடிப்பை வெளிப்படுத்த அவிகாவிற்கு படத்தில் போதுமான இடம் இல்லை.பாடல்கள் படத்திற்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.


இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் சிலவற்றை நீக்கி, முதல் பாதில் வரும் காதல் காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருந்தால் படத்தின் வேகம் சற்றே கூடியிருக்கும். படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் நம்மால் சிரிக்க முடிகிறது. திசை மாறாத திரைக்கதை, அதை தாங்கி கொண்டு செல்ல இயல்பான வசனங்கள் என நம்மை முழுதாக சிரிக்க வைக்கிறார் இயக்குனர். படத்தில் பெரும் குறை என்று சொன்னால் அது படத்தின் நீளம் தான். முதல் பாதியின் நீளத்தை குறைத்திருக்கலாம்.எது எப்படியோ 120 டிக்கெடுக்கு வஞ்சனையில்லாமால் திருப்திப்படுத்துகிறார்கள்.


சினிமா சூபிஸ்தா மாவா - சவாலே சமாளி



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in