விமர்சனம்
---------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
இருட்டில் எடுக்காமல் நல்ல உச்சி வெயில் வெளிச்சத்தில் ஒரு பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார்கள்!
தான் காமம் கொண்ட பெண், செத்துப் போய் பேயாக மாறினாலும் அந்தப் பேயுடன் உறவு கொள்ளத் துடிக்கும் ஒருவனது கதைதான் சவுகார்பேட்டை. இடையில் பங்களா, கடன்கார சவுகார்பேட் சேட், கொலை, பேய் என்று கொஞ்சம் ஜிகினா சுற்றியிருக்கிறார்கள். (இயக்கம் வடிவுடையான்)
ஸ்ரீகாந்துக்கு இரட்டை வேடம். பேயாக வரும் ஹீரோவை விட, இடைவேளைக்குப் பிறகு மந்திரவாதியாக வந்து அடடடடடடடடா என்று இழுத்து முழக்கி இச்சைக்கு முயலும் வில்லன் பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். மனிதர் நன்றாக இருக்கிறார். நடிக்கவும் வருகிறது. ஆனால் பெரிய ஹிட் எதுவும் ஏன் தர முடியவில்லை?
கவர்ச்சிக்குக் கதாநாயகி, அந்த ஊடல், கிளுகிளு!
சரவணன், பவர் ஸ்டார், சிங்கம்புலி என்று மூவரும் அவ்வப்போது சிரிக்கவும், அவ்வப்போது எரிச்சல் படவும் வைக்கிறார்கள்.
வடிவுக்கரசி அய்யோ பாவம்!
க்ளைமாக்ஸில் மந்திரவாதிக்கு ஆதரவாக சுடுகாட்டுப் பேயெல்லாம் எழுந்து வந்து சண்டை போடுவது வேடிக்கை.
பாடல்கள் எல்லாம் பேய்க்கத்தல்!
கடையில் இருக்கும் வடையெல்லாம் முடியாக இருக்க, காரணம் வடை மாஸ்டர் ஒரு கையில்லாததால் அக்குளில் வைத்து வடை சுடும் காமெடி உவ்வாக்!
வித்தியாசமான கதையை எப்படி சொதப்பலாம் என்பதை இந்தப் படத்தின் திரைக்கதை க்ளாஸ் எடுக்கிறது.
சவுகார்பேட்டை : காமெடிப் பேய்!
குமுதம் ரேட்டிங்: ஓகே














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!