விமர்சனம்
.
இரட்டை வேடங்களில்., வரும் நீத்து சந்திரா, தனது இயல்பான நடிப்பால் இரண்டு கேரக்டரிலும் வெவ்வேறு வகையில் மிளிர்ந்துள்ளார். அவரை சுற்றி அவராலேயே ஏற்படுத்தப்பட்டுள்ள மர்மங்கள் விலகும் கிளைமாக்ஸ் காட்சி , எதிர்பாராத ட்விஸ்ட் என்பது இப்படத்திற்கு வலு சேர்க்கிறது.
டிவி நிருபராக வரும் கோமல் சர்மாவும் கோணல் மாணல் அழகில் ரசிகனை குதூகளப்படுத்துகிறார். நடிகையாக வரும் இனியா அவரது லொட லொட அக்காவாக வரும் காமெடி அர்ச்சனா, ஆர்.கே.வுடன் பழனி மலைக்கு மாலை போட்ட ஆ சாமியாக படம் முழுக்க வலம் வரும் போலீஸ்அதிகாரி நாசர் சீரியஸ் படத்தில் பெரும் கலகலப்பூட்டுகிறார்.
இரயில்வே சேர்மன் கம் கொலைபாதக எம்.பியாக வரும் சுமன், ஆர்.கே.விற்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டு வருவதால் கடுப்பாகும் கடத்தல்கார ரயில்வே போலீசாக வரும் ஜான்விஜய், சீட்டு கட்டும் கையுமாக டி.டி.ஆராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், டாக்டர்களாக வரும் பவன் , சுஜா வாருணி, தீவிரவாதியாக வரும் ஆர்.கே.செல்வமணி, நடிகையின் அக்கா புருஷன் மதன் பாப், காதல் தோல்வி வாலிபனின் தந்தையாக வரும் சிங்கமுத்து... என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், எண்ணற்ற நட்சத்திரங்கள் வந்தாலும், அவர்கள் அனைவருக்கும் நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருப்பது, படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும்படி இருக்கிறது.
ஒரு சட்டசபையையே சட்ட பாக்கெட்டுக்குள் வைத்து விட்டு... சுத்தியவங்க... எல்லாம் கூட சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது...., அக்கியூஸ்ட்டுங்க திருந்தினாக் கூட அரசியல்வாதிங்க விட மாட்டிங்களே... என்பது உள்ளிட்ட வசன வரிகளும் படத்திற்கு பக்கா பலமாய் அமைந்துள்ளது.
சஞ்சீவ் குமாரின் ஒளிப்பதிவும், இரயிலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து விவேகமாகவும் , வித்தியாச மாகவும் வேலை செய்திருக்கிறது. வாவ்!
அதேபோன்று இசையாளர் தமனின் பின்னணி இசையில் நாமும் அந்த இரயிலில் பயணிக்கும் பிரம்மையை ஏற்படுத்துவது படத்திற்கு விறுவிறுப்பு கூட்டு கிறது.
ஓடும் ரெயிலில் நடக்கும் ஒருகொலை முயற்சி, மற்றும் இரண்டு இளம் பெண் கொலைகள்... மற்றும் அதை தொடர்ந்து நடைபெறும் பரபரப்பான விசாரணை, விசாரணை வளையத்தில் சிக்கும் பிரபலங்கள்... என்று இப்படத் தொடக்கத்திலேயே புயல் வேகத்தில் கிளம்பும் வேகம், வைகை எக்ஸ்பிரஸ் எனும் பெயருக்கு ஏற்ப காட்சிக்கு காட்சி கூடி கடைசி வரை குறையாமலேயே இயக்குனர் ஷாஜி கைலாஷின் இயக்கத்தில் சென்றுள்ளது பாராட்டுதலுக்குரியது. அதேநேரம் வைகை எக்ஸ்பிரஸ் என்பது சென்னை - மதுரை இடையே நிஜத்தில் தினமும் ஓடும் பகல்நேர இரயில் வண்டி, அதே பெயரில் இரவில் சிறப்பு இரயில் இப்படக் கதைப்படி இயக்கப்படுவதும், அதுவே இப்பட டைட்டில் என்பதும் லாஜிக்காக ரொம்பவே இடிக்கிறது. சென்னை - மதுரை இடையே நிறைய சிறப்பு இரயில்கள் இயக்கப்படலாம். ஆனால், அதற்கு தினமும் ரெகுலராக இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் எனும் பெயர் சூட்டப்படாது... என்பதே நம் வாதம் . ஆனாலும் , மொத்தப்பட மும் ஆரம்பித்ததும், முடிவதும் தெரியத அளவிற்கு விறுவிறுப்பான, எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய திரில்லிங்கான அனுபவத்தை
கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
ஆகமொத்தத்தில், வேகம், விவேகம் முழுக்க, முழுக்க நிரம்பிய ஆர்.கே.வின் வைகை எக்ஸ்பிரஸ் - வசூல் எக்ஸ்பிரஸ் ஆக வாரி குவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!