காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

ஏ.எல். விஜய் இயக்கிய தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வரும் கங்கனா ரணாவத், தற்போது சமந்தா - நாகசைதன்யா பிரிந்து விட்டதாக அறிவித்ததை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், விவாகரத்து என்றாலே தவறு ஆணின் பக்கம்தான் இருக்கும். பெண்களை ஆடைகளை போன்று பயன்படுத்தி எறிந்து விட்டு பின்னர் அவர்களை தங்கள் நண்பர்கள் போல் என்று கூறிக்கொள்கிறார்கள். நூற்றில் ஒரு பெண் வேண்டுமானால் தவறு செய்யலாம். மேலும், இதுபோன்ற நடிகர்களை ரசிகர்களும் ஊடகங்களும் ஊக்கப்படுத்துவது வெட்கக்கேடானது. நடிகர்களை நியாயப்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரிக்கிறார்கள். இந்தமாதிரி விவாகரத்து என்பது முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருகிறது என்று நாகசைதன்யாவை விமர்சனம் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.
அதோடு நில்லாமல், தற்போது அமீர்கான் நடிக்கும் படம் மூலம் ஹிந்தியில் நாகசைதன்யா அறிமுகம் ஆவதையும் குறிப்பிட்டு அமீர்கானையும் விமர்சித்துள்ளார் கங்கனா. அதாவது, இந்த நடிகர் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க் கையை அழித்தார். அப்படிப்பட்டவர் இப்போது நாக சைதன்யாவுக்கு பாலிவுட்டில் வழிகாட்டும் ஒளியாகியிருக்கிறார் என்று அமீர்கானையும் விமர்சனம் செய்திருக்கிறார் கங்கனா ரணாவத்.