300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நடிகர் நடிகைகளிடம் போதை ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யான்கான் தனது ஆண்-பெண் நண்பர்களுக்கு மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உல்லாச கப்பலில் போதை பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்தியதை கண்டு பிடித்துள்ளனர்.
இதையடுத்து ஷாரூக்கான் மகன் ஆர்யான்கானின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த 6 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதோடு ஆர்யான்கானுக்கும் இந்த போதை கடத்தலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ஷாரூக்கான், அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.