'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சாகுந்தலம் படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடிப்பவர் புதிய படங்களில் நடிப்பதற்கு கதைகள் கேட்டு வருகிறார். சமந்தா ஹிந்தி படங்களில் இதுவரை நடிக்காத போதும் அவர் நடித்த பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்ததொடர் சமந்தாவிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தவகையில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், பேமிலிமேன்-2 தொடரில் சமந்தா மிகச்சிறப்பாக நடித்திருந்ததாகவும், அவரது கேரக்டரை தான் வெகுவாக ரசித்ததாக தெரிவித்திருப்பவர், அவருடன் இணைந்து நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஷாகித் கபூர் தற்போது பேமிலிமேன்-2 தொடரை இயக்கிய ராஜ்-டிகே இயக்கி வரும் புதிய வெப்தொடரில் நடித்து வருகிறார்.