'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் |

பாலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் வழக்கம் ஷோலே காலத்திலேயே தொடங்கி விட்டது. ஹீரோயின்கள் இணைந்து நடிப்பது அபூர்வமாகவே நடக்கும். அந்த வகையில் தற்போது, பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ஆலியா பட், பிரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைப் மூவரும் ஒன்றாக ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
பிரபல பாலிவுட் இயக்குனர் பர்கான் அக்தர் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஜீ லீ ஸாரா என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இது படத்தில் நடிக்கும் 3 நாயகிகளின் கதாபாத்திரங்களின் பெயர்கள். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஒரு காரின் படமும், அந்த காருக்குள் ஒரு சாலை மற்றும் பலவித கட்டிடங்கள், சோலைகளின் படமும் இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் 3 பெண்களின் ஒரு கார் பயணத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்ட படமாக இருக்கும் என்று கணிக்க முடிகிறது. 3 நடிகைகளின் சம்பளம் மட்டுமே 25 கோடி வரும். அப்படியென்றால் படமும் பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கும் என்று கணிக்ககிறார்கள்.