ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். “குச் குச் ஹேதா ஹை, கபி குஷி கபி கம், கபி அல்விதா நா கெஹ்னா, மை நேம் இஸ் கான், ஸ்டூடன் ஆப்த இயர், பாம்பே டாக்கீஸ், ஹே தில் ஹை முஷ்கில்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
தனது தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். கரண் ஜோஹர் கடைசியாக இயக்கிய படம் 2016ம் ஆண்டு வெளிவந்தது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
தன்னுடைய இடைவெளிக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தனது புதிய படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ரன்வீர் சிங், ஆலியா பட் நடிக்க 'ராக்கி அஹவர் ராணிகி பிரேம் கஹானி' என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துளளார். இன்று ரன்வீர் சிங் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டு இப்படம் வெளியாகும்.
“லென்ஸுக்கு முன்னால் எனது அபிமான மக்கள் இருக்கா, அதன் பின்னால் நான் இருப்பது த்ரில்லிங்காக உள்ளது” என இந்த புதிய பட அறிவிப்பு குறித்து கரண் குறிப்பிட்டுள்ளார்.