விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை பொருத்தவரை, இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என பெயர் பெற்றுள்ள அளவிற்கு, கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக, கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும், அதிக அளவில் நிதி உதவியும் செய்து வருகிறார் என்பது தெரிந்த விஷயம் தான். அதுமட்டுமல்ல தற்போது ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள பாந்திப்பூரா மாவட்டத்திலுள்ள நீரு என்கிற பகுதிக்கு தனி ஹெலிகாப்டரில் சென்ற அக்ஷய் குமார் அந்த பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் வாலிபால் மற்றும் நடனம் ஆடவும் செய்தார். அதுமட்டுமல்ல அந்த நீரு கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்திய அவர், அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் அளித்துள்ளார். அக்ஷய் குமாரின் இந்த செயல் ராணுவ வீரர்களையும் காஷ்மீர் எல்லைப் பகுதி மக்களையும் ஒருசேர மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது