விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணவத், அதற்கேற்றார்போல் சர்ச்சையான கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். பின்விளைவுகள் பற்றி அறியாமல் அவர் கூறும் கருத்துக்களால் தற்போது அவருக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஊரடங்கு ஓரளவுக்கு தளர்வு பெற்றபின், படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறார் கங்கனா. அவருடைய தற்போதைய பாஸ்போர்ட் செப்டம்பர் 13ல் காலாவதி ஆவதால் அதை முன்கூட்டியே புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் கங்கனா.
ஆனால் அவர் ஏற்கனவே தனது ட்விட்டரில், சர்ச்சையை தூண்டும் விதமாக கருத்துக்களை கூறியதாக, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளதால் விசாவை புதுப்பிக்க முடியாது என கூறிவிட்டார்கள் விமான நிலைய அதிகாரிகள். இதைத்தொடர்ந்து கங்கனாவும் அவரது சகோதரியும் தங்களுக்கு படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருப்பதை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை மனு செய்துள்ளனர்.