மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழில் கார்த்தியுடன் நடித்த சுல்தான் படத்திற்கு பிறகு வேறு படங்களில் ஒப்பந்தமாகாத ராஷ்மிகாமந்தனா, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பாவில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுமே 2022ஆம் ஆண்டில் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் சாஜித் நதியாட்வாலா என்பவரும் தனது புதிய படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அந்த வகையில், இன்னமும் ஹிந்தியில் அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில் மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகப்போகிறார். இதனால் 2022ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடுவார் என்கிற பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.