ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? |

தமிழில் கார்த்தியுடன் நடித்த சுல்தான் படத்திற்கு பிறகு வேறு படங்களில் ஒப்பந்தமாகாத ராஷ்மிகாமந்தனா, தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பாவில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு படங்களுமே 2022ஆம் ஆண்டில் திரைக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்தபடியாக பிரபல ஹிந்தி பட தயாரிப்பாளர் சாஜித் நதியாட்வாலா என்பவரும் தனது புதிய படத்திற்கு ராஷ்மிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அந்த வகையில், இன்னமும் ஹிந்தியில் அவர் நடித்து ஒரு படம் கூட திரைக்கு வராத நிலையில் மூன்றாவது படத்தில் ஒப்பந்தமாகப்போகிறார். இதனால் 2022ஆம் ஆண்டில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகை பட்டியலில் சேர்ந்து விடுவார் என்கிற பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.