பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
இயக்குனர் ராம் கோபால் வர்மா போல, பாலிவுட் நடிகரும் யூடியூப் விமர்சகருமான கமால் ரஷீத் கான் பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.. பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல், மோகன்லால், ரஜினி, அஜித் என தென்னிந்திய முன்னணி நடிகர்களையும் அவர்கள் படங்கள் வெளியாகும் சமயத்தில் விமர்சித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான சல்மான்கானின் ராதே படம் குறித்து மோசமாக விமர்சித்தார். இதனால் சல்மான்கான் இவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தநிலையில் கமால் கான், “உங்கள் ஆதரவுக்கு நன்றி கோவிந்தா” என கூறி ஒரு வெளியிட்டுள்ள டுவீட் ஒன்று, பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சல்மான்கான் சர்ச்சையில் இந்த கமால் கானுக்கு ஆதரவாக கோவிந்தா இருக்கிறாரோ என்பது போன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாக ஆரம்பித்தன.
இதனால் பதறிப்போன கோவிந்தா, “நான் கமால் கானுடனான தொடர்பை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. அது வேறு யாராவது அவருடைய நண்பரான கோவிந்தாவாக இருக்கலாம். அதனால் சல்மான்கான் சர்ச்சையில் என்னை தொடர்பு படுத்த வேண்டாம்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் கோவிந்தாவையும் கிண்டலடிக்கும் வகையில், “நிஜம் தான்.. அது நீங்கள் இல்லை கோவிந்தா ஜி. என்னுடைய நண்பர் கோவிந்தா பற்றித்தான் நான் கூறியிருந்தேன்” என கூறியுள்ளார் கமால் கான்.. எப்படியோ சல்மான்கான் விவகாரத்தில் தான் சிக்கவில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் கோவிந்தா.