மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது நினைவு தினம் வர இருக்கிறது. இதையொட்டி ஒரு சிலர் சுஷாந்த் பெயரில் உதவி செய்கிறோம் என கூறிக்கொண்டு அவர் பெயரில் நன்கொடை, நிதி வசூலில் இறங்கியுள்ளனர்.
இந்த செய்திகளை கேள்விப்பட்ட சுஷாந்த் சிங்கின் சகோதரிகளில் ஒருவரான மிட்டு சிங் என்பவர் இதுகுறித்து சற்று காட்டமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர், தாங்களாகவே உரிமை எடுத்துக்கொண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பதாக கேள்விப்பட்டேன்.. தங்களது சுயநலத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்வது மனிதத்தன்மையற்ற செயல்.. நாங்கள் சுஷாந்த் சிங் சார்பாக நன்கொடை வசூலிக்க அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நபரையும் அறிவிக்கவில்லை. தவிர இப்படி எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை முன்னிறுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியும் இல்லை” என கூறியுள்ளார்.