எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது நினைவு தினம் வர இருக்கிறது. இதையொட்டி ஒரு சிலர் சுஷாந்த் பெயரில் உதவி செய்கிறோம் என கூறிக்கொண்டு அவர் பெயரில் நன்கொடை, நிதி வசூலில் இறங்கியுள்ளனர்.
இந்த செய்திகளை கேள்விப்பட்ட சுஷாந்த் சிங்கின் சகோதரிகளில் ஒருவரான மிட்டு சிங் என்பவர் இதுகுறித்து சற்று காட்டமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர், தாங்களாகவே உரிமை எடுத்துக்கொண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பதாக கேள்விப்பட்டேன்.. தங்களது சுயநலத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்வது மனிதத்தன்மையற்ற செயல்.. நாங்கள் சுஷாந்த் சிங் சார்பாக நன்கொடை வசூலிக்க அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நபரையும் அறிவிக்கவில்லை. தவிர இப்படி எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை முன்னிறுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியும் இல்லை” என கூறியுள்ளார்.