நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இது நடந்து கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது நினைவு தினம் வர இருக்கிறது. இதையொட்டி ஒரு சிலர் சுஷாந்த் பெயரில் உதவி செய்கிறோம் என கூறிக்கொண்டு அவர் பெயரில் நன்கொடை, நிதி வசூலில் இறங்கியுள்ளனர்.
இந்த செய்திகளை கேள்விப்பட்ட சுஷாந்த் சிங்கின் சகோதரிகளில் ஒருவரான மிட்டு சிங் என்பவர் இதுகுறித்து சற்று காட்டமாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர், தாங்களாகவே உரிமை எடுத்துக்கொண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை பயன்படுத்தி நன்கொடை வசூலிப்பதாக கேள்விப்பட்டேன்.. தங்களது சுயநலத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்வது மனிதத்தன்மையற்ற செயல்.. நாங்கள் சுஷாந்த் சிங் சார்பாக நன்கொடை வசூலிக்க அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு நபரையும் அறிவிக்கவில்லை. தவிர இப்படி எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வை முன்னிறுத்தி அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் எண்ணம் துளியும் இல்லை” என கூறியுள்ளார்.




