ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கர்நாடகத்தில் பிறந்து உலக அழகியாக பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்தவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட அவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் முதல் அலை தொடங்கியபோது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஆன்லைனில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவினார். தற்போது இரண்டாவது அலையில் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் நிதி திரட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளார். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வசூலாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் கூறியிருப்பதாவது: எனது முயற்சிக்கு மக்கள் அளித்த ஆதரவால் இதுவரை 20 கோடி ரூபாய் வரை நிதி திரண்டுள்ளது. தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது. இந்த நிதியில் இருந்து 10 கொரோனா மையங்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 422 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி கொடுத்துள்ளோம். 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து வருகிறோம். நன்கொடை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.