டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கர்நாடகத்தில் பிறந்து உலக அழகியாக பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்தவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட அவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் முதல் அலை தொடங்கியபோது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஆன்லைனில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவினார். தற்போது இரண்டாவது அலையில் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் நிதி திரட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளார். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வசூலாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் கூறியிருப்பதாவது: எனது முயற்சிக்கு மக்கள் அளித்த ஆதரவால் இதுவரை 20 கோடி ரூபாய் வரை நிதி திரண்டுள்ளது. தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது. இந்த நிதியில் இருந்து 10 கொரோனா மையங்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 422 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி கொடுத்துள்ளோம். 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து வருகிறோம். நன்கொடை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.