பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கர்நாடகத்தில் பிறந்து உலக அழகியாக பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் படங்களில் நடித்தவர் தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட அவர் அமெரிக்காவில் கணவருடன் வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் முதல் அலை தொடங்கியபோது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மற்றும் ஆன்லைனில் படிக்கும் குழந்தைகளுக்கு உதவினார். தற்போது இரண்டாவது அலையில் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் நிதி திரட்டும் பணியை முடுக்கி விட்டுள்ளார். தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுவரை 3 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி வசூலாகி இருப்பதாக கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் கூறியிருப்பதாவது: எனது முயற்சிக்கு மக்கள் அளித்த ஆதரவால் இதுவரை 20 கோடி ரூபாய் வரை நிதி திரண்டுள்ளது. தொடர்ந்து நிதி குவிந்து வருகிறது. இந்த நிதியில் இருந்து 10 கொரோனா மையங்களுக்கு 500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 422 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி கொடுத்துள்ளோம். 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்து வருகிறோம். நன்கொடை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார் பிரியங்கா.