இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சினிமா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த வருட கொரோனா அலை ஏற்பட்ட போது பல திரையுலகப் பிரபலங்கள் அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்தார்கள். தற்போது மீண்டும் அப்படி ஒரு பாதிப்பு நிலை ஏற்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்காக ஹிந்தி நடிகர் சல்மான் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.
இது குறித்து இந்திய மேற்கு திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தலைவர் திவாரி கூறுகையில், “சினிமா தொழிலாளர்கள் பலரது பெயரை சல்மான் கானிடம் வழங்கியுள்ளோம். சல்மான் கான் 25,000 தொழிலளார்களுக்கு தலா 1500 ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் 35 ஆயிரம் மூத்த தொழிலளார்கள் பெயர்ப் பட்டியலை அளித்துள்ளோம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்க அவர்கள் சம்மதித்துள்ளார்கள். தொழிலளார்களின் வங்கிக் கணக்குகளை உறுதி செய்தபின் நேரடியாக அவர்களது கணக்கிலேயே பணத்தை செலுத்திவிடுவார்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.