சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திருமணம் என்பது வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல, என்று நடிகை ராணிமுகர்ஜி கூறியுள்ளார். இந்திய சினிமாவின் வித்தியாசமான நட்சத்திரம் என்ற பெயரை பெற்றவர் நடிகை ராணி முகர்ஜி. வழக்கமான சினிமா ஹீரோயின்கள் போல விருந்துகளில் அதிகமாக அவரைப் பார்க்க முடியாது. தேவையில்லாமல் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனாலும், பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுபவர். ஏறத்தாழ 50 படங்களில் நடித்துவிட்டார். அதில் பாதிக்கு மேற்பட்ட படங்கள் வெற்றிப் படங்கள் அல்லது பாராட்டையும் விருதுகளையும் அள்ளிக் குவித்த படங்கள்.
திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என்னுடைய திருமணம் பலருக்கு வேடிக்கையாகத் தெரிகிறது. ஆள் ஆளுக்கு இஷ்டத்திற்குக் கதை கட்டுகிறார்கள். என்ன செய்வது, சினிமா போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டால் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதவும் பேசவும் மற்றவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. இது தவிர்க்க முடியாதது. என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல. மிகவும் கவனமாகவும் தீர யோசித்தும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. உலகத்திற்கு வரும் எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாகத்தான் வருவதாகச் சொல்வார்கள். எனக்காக எங்கேயோ ஒருவர் இல்லாமலா இருப்பார்? அவர் வரும்வரை நான் தனிமையை ரசிக்கிறேன். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நான் தயாராக இல்லை, என்று கூறியிருக்கிறார்.