வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமூக வலைத்தள பக்கங்களில் துணிச்சலான கருத்துக்களை கூறி வருகிறவர். இந்த கருத்துகளால் அவர் பல சிக்கல்களை சந்தித்தபோது அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கருத்துக்களை எழுதி வருகிறார். மக்கள் தொகையை கட்டுப்படுத்த இனி 3வது குழந்தை பெற்றவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று அதிரடியான கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: அதிக மக்கள் தொகை காரணமாக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். 130 கோடி என்பது நமது அதிகாரபூர்வ மக்கள் தொகை. இதோடு சட்டவிரோதமாக குடியேறிய 25 கோடி மக்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் 32 கோடி மக்கள். ஆனால், இந்தியாவை விட 3 மடங்கு நிலமும் வளமும் உள்ளது. சீனாவில் இந்தியாவுக்கு ஈடான மக்கள் தொகை இருக்கலாம். ஆனால், அங்கும் நிலமும் வளமும் மூன்று மடங்கு அதிகம்.
இங்கு மக்கள்தொகை பிரச்சினை மிக மோசமாக இருந்ததால் தான் இந்திரா காந்தி கட்டாயமாக பல லட்சம் மக்களுக்குக் கருத்தடை செய்தார். ஆனால், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த தேசத்தை எப்படிக் கையாள்வது சொல்லுங்கள்?. மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைக்கக் கடுமையான சட்டங்கள் வேண்டும். இன்றைய நிலையைப் பார்க்கும்போது, மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் குறைந்தபட்சம் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்கப்பட வேண்டும். என்று கங்கனா கூறியுள்ளார்.
கங்கனாவின் இந்தக் கருத்தும் வழக்கம் போல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.