23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டில்லியில் உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது தாக்கப்பட்டார் என்பது போன்று ஒரு வீடியோவும், அதுகுறித்த செய்தியும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அஜய் தேவ்கன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜய் தேவ்கன் குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆதாரமற்ற செய்திகளையும் யாரோ தாக்கப்பட்டதை அஜய் தேவகன் தாக்கப்பட்டது போன்று தவறாக சித்தரித்தும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அஜய் தேவ்கன் டில்லிக்கே போகவில்லை. கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த பதினான்கு மாதங்களாக அவர் மும்பையில் தான் இருக்கிறார். பின் எப்படி அவர் டில்லியில் தாக்கப்பட்டிருக்க முடியும்..?” என அதில் கூறியுள்ளனர்.