ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டில்லியில் உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது தாக்கப்பட்டார் என்பது போன்று ஒரு வீடியோவும், அதுகுறித்த செய்தியும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அஜய் தேவ்கன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜய் தேவ்கன் குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆதாரமற்ற செய்திகளையும் யாரோ தாக்கப்பட்டதை அஜய் தேவகன் தாக்கப்பட்டது போன்று தவறாக சித்தரித்தும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அஜய் தேவ்கன் டில்லிக்கே போகவில்லை. கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த பதினான்கு மாதங்களாக அவர் மும்பையில் தான் இருக்கிறார். பின் எப்படி அவர் டில்லியில் தாக்கப்பட்டிருக்க முடியும்..?” என அதில் கூறியுள்ளனர்.




