சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
நடிகை பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் விராட பர்வம் மற்றும் ஹிந்தியில் மைதான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. இதில் ஹிந்தியில் இவர் நடிக்கும் மைதான் படம் கால்பந்து விளையாட்டு பின்னணியில் அறுபதுகளில் நிகழும் கதை. பிரபல கால்பந்து கோச் சையது அப்துல் ரஹீம் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கோச் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனும், அவரது மனைவியாக பிரியாமணியும் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் கதாபாத்திரம் பற்றி பிரியாமணி கூறும்போது, “படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளேன்.. கதைப்படி அஜய் தேவ்கன் ஆங்கிலத்தை ரொம்பவே நேசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எந்த அளவுக்கு என்றால், கடைக்கு ஷாப்பிங் போகும்போது அம்மாவுக்கும் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் கிப்ட் பொருட்கள் வாங்கினாலும் மனைவியான எனக்கு ஆங்கில டிக்சனரியை வாங்கி தருவார்.. எதற்காக என நான் கேட்டதற்கு, பிழையில்லாமல் நன்றாக ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக என பதில் கூறுவார். அந்த அளவுக்கு அவர் ஆங்கிலத்தை நேசிப்பவராக நடித்துள்ளார்” என கூறுகிறார் பிரியாமணி.