பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
சில வருடங்களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு தன்னை மாற்றி கொண்ட சுனில் ஷெட்டி, தர்பார், பயில்வான், விரைவில் வெளியாக இருக்கும் 'மரைக்கார்' என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவரது மகன் ஆஹான் ஷெட்டியும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனரான சாஜித் நடியத்வாலா டைரக்சனில் உருவாகும் 'தடாப்' என்கிற படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படம் செப்-24ஆம் தேதி ரிலீசாகிறது.
படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதுடன் ஆஹான் ஷெட்டியின் அறிமுகம் குறித்த தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அக்சய் குமார். மேலும் அவர் ஆஹான் ஷெட்டி பற்றி கூறும்போது, “உன்னுடைய தந்தை அறிமுகமான 'பயில்வான்' படத்தின் போஸ்டரில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். இப்போது நீ ஹீரோவாக அறிமுகமாகும் போஸ்டரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
அக்சய் குமாரும் சுனில் ஷெட்டியும் தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்தில் ஒரே சமயத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..