காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா |
சில வருடங்களுக்கு முன்பு வரை பாலிவுட்டில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு தன்னை மாற்றி கொண்ட சுனில் ஷெட்டி, தர்பார், பயில்வான், விரைவில் வெளியாக இருக்கும் 'மரைக்கார்' என தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவரது மகன் ஆஹான் ஷெட்டியும் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரபல இயக்குனரான சாஜித் நடியத்வாலா டைரக்சனில் உருவாகும் 'தடாப்' என்கிற படத்தில் தான் இவர் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப்படம் செப்-24ஆம் தேதி ரிலீசாகிறது.
படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதுடன் ஆஹான் ஷெட்டியின் அறிமுகம் குறித்த தகவலையும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் அக்சய் குமார். மேலும் அவர் ஆஹான் ஷெட்டி பற்றி கூறும்போது, “உன்னுடைய தந்தை அறிமுகமான 'பயில்வான்' படத்தின் போஸ்டரில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். இப்போது நீ ஹீரோவாக அறிமுகமாகும் போஸ்டரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
அக்சய் குமாரும் சுனில் ஷெட்டியும் தொண்ணூறுகளின் ஆரம்பகாலத்தில் ஒரே சமயத்தில் சினிமாவில் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..