தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணம் உறுதிப்பட தெரியாமல் இருந்தது. பலரும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கல்லீரல் தொடர்பான பிரச்னை என்றும், அதற்கான ஆபரேஷன் என்று கூறினர். இந்நிலையில் நேற்று கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளார்.
இதுப்பற்றி, ''இந்த வயதில் கண்ணில் ஆபரேஷன் என்பது சிக்கலானது. நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே. கண்கள் மூடியிருப்பதால் எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான நிலையில் உள்ளேன். இசை மட்டும் கேட்க முயல்கிறேன், அதிலும் திருப்தியில்லை'' என தெரிவித்துள்ளார் அமிதாப்.