இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணையில் அவரது காதலி ரியா சக்கர்போர்த்தி சிக்கினார். பின்னர் சுஷாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் செய்து ஜாமீனில் வெளிவந்தார். ஏற்கனவே வேறு சிலருடன் ரியா நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்றும் சில சர்ச்சை செய்திகள் வெளியாகி வந்தன.
இந்தநிலையில் ரியாவின் நண்பரான் ராஜீவ் லக்ஷ்மண் என்பவர், ரியா சக்கர்போர்த்தியுடன் நெருக்காமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் 'மை கேர்ள்' என்கிற கேப்ஷனும் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையான கருத்துக்களும் கமெண்டுகளும் எழவே, உடனடியாக நாதா புகைப்படங்களை அழித்துவிட்டார் ராஜீவ் லக்ஷ்மண்.
மேலும், “நான் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கேப்ஷனாக குறிப்பிட்ட வார்த்தைகளால் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கிவிட்டது போல தோன்றுகிறது. ரியா எனது நீண்டநாள் தோழி. மீண்டும் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.