பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் |
கடந்த சில மாதங்களுக்கு முன் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். அதை தொடர்ந்து போலீஸ் விசாரணையில் அவரது காதலி ரியா சக்கர்போர்த்தி சிக்கினார். பின்னர் சுஷாந்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் செய்து ஜாமீனில் வெளிவந்தார். ஏற்கனவே வேறு சிலருடன் ரியா நெருக்கமாக நட்பு பாராட்டி வந்தார் என்றும் சில சர்ச்சை செய்திகள் வெளியாகி வந்தன.
இந்தநிலையில் ரியாவின் நண்பரான் ராஜீவ் லக்ஷ்மண் என்பவர், ரியா சக்கர்போர்த்தியுடன் நெருக்காமாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டதுடன் 'மை கேர்ள்' என்கிற கேப்ஷனும் கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து சோஷியல் மீடியாவில் சர்ச்சையான கருத்துக்களும் கமெண்டுகளும் எழவே, உடனடியாக நாதா புகைப்படங்களை அழித்துவிட்டார் ராஜீவ் லக்ஷ்மண்.
மேலும், “நான் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் கேப்ஷனாக குறிப்பிட்ட வார்த்தைகளால் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கிவிட்டது போல தோன்றுகிறது. ரியா எனது நீண்டநாள் தோழி. மீண்டும் அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.