பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது அவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தனது கணவரும், பாடகருமான நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். கொரோனா காலத்தில் அங்குள்ள பெண்கள், சிறுவர்களுக்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையல் பிரியங்கா நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரியங்காவை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும், அபராதம் விதித்ததாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை பிரியங்கா தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து அவரின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், லண்டனில் சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தன் படத்தின் ஷுட்டிங்கிற்காக தலைமுடியை கலரிங் செய்ய சலூன் கடைக்கு சென்றார். அதற்கான உரிய அனுமதியை பெற்றே அவர் அங்கு சென்றுள்ளார். கொரோனா விதிமுறை எதையும் அவர் மீறவில்லை. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.