காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது அவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தனது கணவரும், பாடகருமான நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். கொரோனா காலத்தில் அங்குள்ள பெண்கள், சிறுவர்களுக்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையல் பிரியங்கா நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரியங்காவை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும், அபராதம் விதித்ததாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை பிரியங்கா தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து அவரின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், லண்டனில் சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தன் படத்தின் ஷுட்டிங்கிற்காக தலைமுடியை கலரிங் செய்ய சலூன் கடைக்கு சென்றார். அதற்கான உரிய அனுமதியை பெற்றே அவர் அங்கு சென்றுள்ளார். கொரோனா விதிமுறை எதையும் அவர் மீறவில்லை. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.