ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இயங்குகிறவர். மனதில்பட்ட கருத்துக்களை துணிச்சலுடன் பேசக்கூடியவர். இதனால் அவ்வப்போது சில சிக்கல்களையும் சந்திப்பார். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்.
டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா வெளியிட்ட சில கருத்துக்கள் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக காஸ்டிங் இயக்குனர் முனாவர் அலி செய்யது என்பவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய பாந்திரா போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து பாந்திரா போலீசார் தேசத்துரோகம், மோதலை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகை கங்கனா ரணவத்திற்கு மும்பை போலீசார் 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவானது.
இந்தநிலையில் அவர் பாந்திரா போலீஸ் நிலையத்திற்கு நேற்று விசாரணைக்கு வந்தார். அவருக்கு மத்திய அரசின் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. கங்கனா ரணவத்திடம் போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.