ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க எல்லை தாண்டி, 6 வருடம் சிறைவாசம் அனுபவித்து விடுதலையான இளைஞர் பற்றி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அவராவது காதலியை பார்க்க எல்லை தாண்டினார். ஆனால் இதேபோல பாகிஸ்தானில் இருந்து அப்துல்லா என்பவரோ, தனது அபிமான நடிகரான ஷாருக்கானையும், அவருக்கு ஜோடியாக நடித்த கஜோலையும் பார்க்க வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் முறையான அனுமதியின்றி இந்திய எல்லையை தாண்டியபோது வாகாவில் பிடிபட்டார்.
தற்போது பதினெட்டு மாத சிறைவாசம் கழிந்த நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இனிமேல் இப்படி முறையற்ற விதமாக இந்தியாவுக்குள் வரமாட்டேன் என கூறியுள்ள அவர், பாகிஸ்தான் திரும்புவதற்குள் ஷாருக்கானை சந்தித்துவிட விரும்புகிறாராம். அதன் மூலம் தான் சிறையில் அனுபவித்த வலிகள் பறந்துவிடும் என்கிறாராம் இந்த அப்பாவி ரசிகர்.