ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்திய திரையுலகமே, ஆவலோடு காத்திருந்த பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களான ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் திருமணம், நவ., 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், இத்தாலியிலுள்ள லேக் கோமா நகரில், மிக பிரமாண்டமாக நடந்தது.
பல ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த உச்ச நட்சத்திரங்கள், சில நாட்களுக்கு முன், திருமணச் செய்தியை 'டுவிட்டரில்' ஒரே நேரத்தில் அறிவித்ததும், 'ராயல் வெட்டிங்' ஆக தேசமே பேசியது; சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் இதுவே 'வைரல்' ஆனது.
இந்நிலையில், சக நட்சத்திரங்கள், நண்பர்களுக்கு புதுமண தம்பதிகளிடமிருந்து தனிப்பட்ட கடிதத்துடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா இனிப்புப் பெட்டகமும் அனுப்பப்பட்டுள்ளது.
அழகான வடிவமைப்பிலான கடிதத்துடன், இன்ப அதிர்ச்சியாக மைசூர்பா பெட்டகமும் வந்து சேர்ந்த மகிழ்ச்சியை பல பிரபலஸ்தர்கள் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.
அதில், 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா'வின் சுவையையும் புகழ்ந்துள்ளனர்.
'ரன்வீரும் தீபிகாவும் இந்த மைசூர்பாவுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்திருக்க வேண்டும்; தீபிகா ரன்வீரின் அன்பளிப்புக்கு நன்றி' என்றும், 'அவர்களது திருமணப் புகைப்படங்களை விட, உடன் வந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாதான் இப்போது வேண்டும்' என்றும், 'மைசூர்பாவில் காணாமல் போன 'க்' பற்றிய எங்களது விளக்கம், அது மைசூர் பாக் என்று சொல்வதற்கு முன்னரே நாவில் கரைந்து மறைந்து விட்டது' என்றும் முக்கியஸ்தர்கள் கூறியுள்ளனர்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' நிறுவனர் கிருஷ்ணனை தொடர்பு கொண்டபோது, ''ஒரு முக்கியமான பிரபலத்துக்கு மைசூர்பா மொத்தமாக தேவை என, எங்களது பெங்களூரூ கிளையை தொடர்பு கொண்டு வாங்கினர். அப்போது, தீபிகா படுகோனே --- ரன்வீர் தம்பதிகளின் திருமண கொண்டாட்டத்திற்குத்தான் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. திரை நட்சத்திரங்களும், முக்கியஸ்தர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனிப்புப் பெட்டகத்தையும், கடிதத்தையும் பகிர்ந்து வைரலான பிறகுதான், தெரிந்துகொண்டோம். அன்பைச் சொல்ல அழகான வழியைத் தேர்ந்தெடுத்த புதுமணத்தம்பதிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். எங்கள் மைசூர்பாவுடனான இனிய தருணங்களைப் பகிர்ந்த, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் அன்பும்,'' என தெரிவித்தார்.
-நமது நிருபர்-