சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மீடூ பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் முதலில் பாலிவுட்டில் தான் பூதாகரகமாக வெடித்தது. அதையடுத்து தற்போது கோலிவுட்டில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழ் சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக குழு அமைக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரையில் உள்ள பெண்களை பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நடிகை டாப்சியுடன் ரேணுகா சகானே, அமோல் குப்தா ஆகியோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இதையடுத்து டாப்சி விடுத்துள்ள செய்தியில், இந்த சினிமா தொழில் நமக்கு ரொட்டியும், வெண்ணெய்யும் தருகிறது. இந்த இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அதனால் அனைவரும் ஒன்றிணைந்து இந்த இடத்தை சுத்தப்படுத்துவோம். இந்த குழுவின் மூலம் நடிகைகளுக்கு ஏற்பட்டு வரும் பாலியல் ரீதியான சிக்கல்களில் இருந்து அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.