ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சிட்னியில் இருந்து மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில் பணி புரிந்த பெண் அதிகாரி ஒருவர் அவரை சோதனை செய்துள்ளார். அப்போது ஷில்பாவின் நிறத்தை கூறி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.ஷில்பாவின் லகேஜ் ஓவர் சைசாக இருப்பதாக கூறி தடுத்துள்ளார்.
இதனால் தான் பிடிக்க வேண்டிய மெல்போர்ன் விமானத்தை தவற விட்டதாக ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இன்னும் வெளிநாடுகளில் இந்தியர்கள் மீதான நிறவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு லண்டனில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பிரதர்ஸ் 5 சீசனில் போட்டியாளராக கலந்துக் கொண்ட ஷில்பா ஷெட்டியை அங்கிருந்த ஹவுஸ்மேட்ஸ் ஷில்பாவின் நிறத்தை வைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் ஷில்பாவிடம் மன்னிப்புக் கோரினார்.