ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமிதாப் பச்சனும் அவ்வப்போது சர்ச்சையில சிக்குவார். சமீபத்தில் தனது மகள் சுவேதாவுடன் ஒரு நகைக் கடை விளம்பரப் படத்தில் நடித்தார். இதுவரை வெளி உலகத்துக்கு அதிகம் வராத, திரையில் தோன்றாத சுவேதா நடித்திருப்பதால் விளம்பரப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. கூடவே இப்போது எதிர்ப்பும் வந்திருக்கிறது. முதலில் அந்த விளம்பரத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்...
அமிதாப்பச்சன் மகளுடன் வங்கி ஒன்றுக்கு சென்று தன் பாஸ்புக்கை கொடுத்து பென்ஷன் தொடர்பாக பேச முற்படுகிறார். அதற்கு மகள் உதவி செய்கிறார். உடனே வங்கி ஊழியர் எரிச்சல்பட்டு பாஸ்புக்கை தள்ளிவிடுகிறார். பிறகு ஒவ்வொரு கவுண்ட்டராக சென்றும் அவருக்கு திரும்ப திரும்ப அதே அனுபவம் ஏற்படுகிறது. இறுதியாக மகளுடன் வங்கி மேலாளரை சந்திக்கிறார் அமிதாப்பச்சன்.
தனக்கு ஒரு மாதத்தில் இரண்டு முறை பென்ஷன் 'கிரடிட்' ஆகிவிட்டது என்று கூறுகிறார். அதை கேட்டதும் மேலாளர் இதற்கு நீங்கள் விருந்துதான் வைக்க வேண்டும் என்கிறார். ஆனால் இப்படி ஏமாற்றி பணம் சேர்ப்பது எனது கொள்கைக்கு விரோதமானது என்கிறார் அமிதாப்பச்சன். அதை கேட்டதும் அதிர்ச்சியாகிறார் மேலாளர். உடனே கையெழுத்திட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றுகிறார்.
இப்படி ஒன்றரை நிமிடம் அந்த விளம்பரம் ஓடுகிறது. இந்த விளம்பரத்துக்கும் நகை கடைக்கும் என்ன சம்பந்தம் என்றால் அமிதாப்பச்சன் போன்றே நேர்மையானதாம் அந்த நகைக் கடை.