ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மஹாராஷ்டிரா மாநிலத்தில், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சினிமா பிரபலங்கள் உதவ வேண்டும் என, மாநில அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், பெரும்பாலான பாலிவுட் பிரபலங்கள், தாய்லாந்தில் நடந்த, ஐ.ஐ.எப்.ஏ., எனப்படும், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருது வழங்கும் விழாவுக்கு சென்று விட்டனர். ஆனால், நடிகை கஜோல் மட்டும், தன் கணவரும், நடிகருமான, அஜய் தேவ்கனுடன், பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களில் பங்கேற்றார்.
'சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமானால், பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்கு, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என, கஜோல் பேசினார். அவரது பிரசாரத்துக்கு, நல்ல தாக்கம் இருந்ததால், அதிகாரிகள், அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.