'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனக்கு இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வருவதில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் விசாரணை குறித்து மோடியையும் அவ்வப்போது பிஜேபியையும் விமர்சித்து பேசியதால் வாய்ப்பு தருவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றும் கூறியிருந்தார்,
மேலும் இன்னொரு பேட்டியில் ஒவ்வொரு நடிகனுக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. அமிதாப் குரல் எவ்வளவு ரீச் ஆகியிருக்கும்.. ஆனால் அவர் கதுவா விவாகரத்தில் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தது அவரது கோழைத்தனத்தையே காட்டுகிறது. மக்களுக்கு நன்கு அறிமுகமான நம்மைப்போன்றவர்கள் கோழைத்தனமாக இருக்கும்போது, இந்த சமுதாயத்தையும் கோழையாக மாற்றுகிறோம் என்பதை உணரவேண்டும்” என அமிதாப் குறித்து விமர்சித்துள்ளார்.