ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2017-ம் ஆண்டிற்கான 65வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று சர்ச்சையுடன் நடந்து முடிந்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் முறையாக தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய விழாவில் அவருடைய கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். விருதை மூவருமே குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அவருடைய அம்மாவின் நினைவாக அம்மாவின் சேலையை அணிந்து கலந்து கொண்டார். அந்த சேலையை நடிகர் ராம்சரணின் திருமணத்தன்று நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்திருக்கிறார்.
ஜான்வி அணிந்தது அவருடைய அம்மா சேலை என்ற தகவலை ஸ்ரீதேவியின் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய மனிஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அந்த சேலை ஸ்ரீதேவியின் தனிப்பட்ட கலெக்ஷனில் இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.