சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ராதிகா ஆப்தே உள்ளிட்ட சில நடிகைகள் திரையுலகில் நடிகைகளுக்கு இருந்து வரும் பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் பல பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டார்.
இந்த நிலையில், தக் என்ற இந்தி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற உஷா ஜாதவ் என்ற ஹிந்தி நடிகையும் திரையுலகில் நடிகைகளுக்கு நிலவி வரும் பாலியல் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையுலகில் தயாரிப்பாளர், டைரக்டர்களிடம் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே நடிகைகளுக்கு படவாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இல்லாதவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று ஓரங்கட்டப்படுகிறார்கள்.
தங்களது சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் சில நடிகைகள் இதற்கு உடன்படுகிறார்கள். இந்த பிரச்சினை புதுவரவு நடிகைகள் மட்டுமின்றி முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கே உள்ளது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் உஷா ஜாதவ்.
இந்த உஷா ஜாதவ், ராம்கோபால் வர்மா இயக்கிய சந்தன கடத்தல் வீரப்பன் கதையில் உருவான வீரப்பன் படத்தில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.