சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் தனித்தனியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அபிஷேக்கின் செல்போனை எடுத்து, அவர் யார் உடன் எல்லாம் பேசுகிறார் என்பதை ஐஸ்வர்யா ராய் கண்காணித்ததாவும், இதனால் ஐஸ்வர்யா மீது அபிஷேக் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார்.
இதனிடையே அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியருக்கு இன்று(ஏப்., 20) திருமண நாள். 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக அபிஷேக் தன் இன்ஸ்டிராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு ஐஸ்வர்யா ராய் உடனான தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.