சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மாவுக்கு அடுத்தபடியாக, தீபிகாவுக்கும், படத் தயாரிப்பின் மீது ஆசை வந்துள்ளது.
பத்மாவதி படத்துக்கு பின், நடிப்பில் கவனம் செலுத்துவதை குறைத்து, படத் தயாரிப்பின் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார், அவர். இதற்காக, சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை விரைவில் துவக்க திட்டமிட்டுள்ளார். முதலாவதாக தயாரிக்கும் படத்தில், தானே ஹீரோயினாக நடிக்கவும் முடிவு செய்துள்ளார், தீபிகா.
''திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது, என் நீண்ட நாள் ஆசை; அதற்கான காலம், தற்போது கனிந்துள்ளதாக கருதுகிறேன். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது, என் நோக்கமல்ல; படங்களில் நடித்து, வேண்டிய அளவு சம்பாதித்து விட்டேன். நாமும் தரமான படங்களை தயாரிக்கலாமே என்ற ஆசை தான், இதற்கு காரணம்,'' என்கிறார், தீபிகா.