சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பத்மாவத் படத்தை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இர்பான் கானுக்கு ஜோடியாக தீபிகா நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், ரவுடி கும்பல்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய கொள்ளை கூட்ட தலைவி சப்னா தீதீ வேடத்தில் தான் தீபிகா நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக தன்னை தயார்படுத்திக் வேலைகளில் தீபிகா ஏற்கனவே இறங்கி விட்டாராம். இப்படத்தின் சூட்டிங் வேலைகள் வரும் மார்ச் மாதம் மும்பையில் துவங்க உள்ளதாம்.
இப்படத்தில் கொள்ளைக் கூட்ட தலைவனாக இர்பான் கானின் மனைவியாக தீபிகா நடிக்க உள்ளாராம். இப்படத்தை விஷால் பரத்வாஜ் இயக்கி, தயாரிக்கிறார். அவருடன் இணைந்து கிர்அர்ஜ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.