ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாகினி எனும் பாம்பு சிரீயல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், முதன்முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் கோல்டு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. அக்ஷ்ய் உடன் நடித்த அனுபவம் குறித்து மவுனி ராய் கூறுகையில்,
படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்ஷ்ய் குமார் அதிக ஈடுபாட்டோடு நடிப்பார். அதை பார்த்தாலே போதும் நமக்கும் அந்த ஈடுபாடு அதிகரித்து விடும். கோல்டு படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை அக்ஷ்ய் குமாரிடமிடருந்து கற்று கொண்டேன். இந்தப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு படக்குழுவினரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றதை அடிப்படையாக கொண்டு கோல்டு படம் உருவாகி உள்ளது. ரீமா காக்தி இயக்கி உள்ளார். பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15-ம், சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாகிறது.