ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நீரஜ் பாண்டே இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி உள்ள படம் அய்யாரி. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சல்மானின் பிக்பாஸ் 11-ல் நடந்தது. அதில், சித்தார்த் மல்கோத்ரா, போஜ்புரி சமூகத்தையும், அந்த மொழியையும் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகை நீத்து சந்திரா, சித்தார்த்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும், அரசியல்வாதியுமான மனோஜ் திவாரியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு, அவர் சித்தார்த் மீது பொதுநல வழக்கு தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மனோஜ் திவாரி கூறுகையில், சித்தார்த்தின் இந்த செயல் கண்டித்தக்கது, மிகவும் கீழ்த்தரமானது. அவர் மீது பொது நல வழக்கு தொடருவேன். நாட்டின் முதல் ஜனாதிபதியான டாஜேந்திர பிரசாத் போஜ்புரி மொழி பேசுவார். இந்தியாவில் உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில், சுமார் 22 கோடி பேர் இந்த மொழியை பேசுகின்றனர். இவர்கள் அத்தனைபேரையும் சித்தார்த், அவமதித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.
இதனிடையே தன்னுடைய செயல் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று சித்தார்த் மல்கோத்ரா கூறியுள்ளார்.