சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் அக்சய்குமாரும் ஒருவர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி ரீமேக்கான ஹாலிடே இந்தி படத்தில் நடித்த அவர், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும், டாய்லெட்-ஏக் பிரேம் கதா, பேடுமேன் போன்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும், இதற்கு முன்பு பெரும்பாலும் ஆக்சன் மற்றும் ரொமாண்டிக் படங்களாக நடித்து வந்த அக்சய்குமார், சமீபகாலமாக சமூக நோக்கமுள்ள கதைகளை தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தற்போது அவர் இந்தியில் நடித்து வரும் டாய் லெட்- ஏக் பிரேம கதா, பேடுமேன் போன்ற படங்கள் சமூக நோக்கமுள்ள கதைகளில்தான் உருவாகி வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் வகையில் டாய்லெட் ஏக் பிரேம்கதா படம் உருவாகிறது.
இந்தநிலையில் அடுத்தபடியாக பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படத்திலும் அக்சய்குமார் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சினிமாவில் பல பிரபலங்களும் பிரதமரின் வாழ்க்கை கதையில் நடிப்பதற்கு அக்சய்குமாரே பொருத்தமானவர் என்று கருத்து கூறி வருகின்றனர்.
இதுகுறித்து இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா விடுத்துள்ள செய்தியில், பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரிப்பவர் அக்சய்குமார். அவரிடமும் நல்ல சமூக நோக்கம் உள்ளது. அதன்காரணமாகவே டாய்லெட் -ஏக் பிரேம கதா படத்தில் நடித்து வருகிறார். மேலும், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு கதையில் அவரது வேடத்தில் நடிக்கவும் அக்சய்குமார் மிக பொருத்தமாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.