இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் | அகண்டா 2: தெலுங்கானா முன்பதிவு தாமதம் | 'பிளாக் பஸ்டர்' வெற்றி இல்லாத 2025? | பணிவு, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றின் ஒட்டுமொத்த உருவம் ‛ஏவிஎம்' சரவணன் : திரையுலகினர் புகழஞ்சலி | ஹீரோயின் ஆன காயத்ரி ரேமா | 8 மணி நேர வேலை சினிமாவில் சாத்தியமில்லை: துல்கர் சல்மான் | கார்த்தி படத்தில் எம்ஜிஆர் பாடல் | இளையராஜாவுடன் சமரசம்: 'டியூட்' வழக்கு முடித்து வைப்பு |

மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா ஜோடியாக அறிமுகமானவர் காயத்ரி ஜெயராமன். அதன்பிறகு ஸ்ரீ, ஏப்ரல் மாதத்தில், வசீகரா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மார்க்கெட் குறைந்ததும் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பினார். ஆழ்கடலுக்குள் நீச்சல் அடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று அதில் மாஸ்டர் ஆனார். அந்தமான் தீவில் அந்த பயிற்சியாளராக பணியாற்றினார். சக பயிற்ச்சியாளரான சமித் ஸ்வானி என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலானார்.
பின்னர் சில காலத்திற்கு பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார். கிராண்ட் மாஸ்டர், சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருந்தவர் இப்போது நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாகியிருக்கிறார். நித்யாராம், மாளவிகா வேல்ஸ் என்ற இளம் நடிகைகளுக்கு போட்டியாக பைரவி கேரக்டரில் நடித்து தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி வருகிறார். நல்ல கேரக்டர்கள், குறிப்பாக டைட்டில் கேரக்டர் அமைந்தால் தொடர்ந்து நடிக்க காயத்ரி ஜெயராமன் முடிவு செய்திருக்கிறார்.