சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் அபிஷேக் பச்சனுக்கும், அவரது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக பாலிவுட்டில் வேகமாக தகவல் பரவி வருகிறது.
தற்போது அபிஷேக் - ஐஸ்வர்யா இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம் அவர்களது மகள், ஆராதானா தானாம். தனது மகளை படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்ய வேண்டும் என அபிஷேக் ஆசைப்படுகிறாராம். இது, பின்னாளில் அவள் நடிப்பை தொடர விரும்பினால், மிகப் பெரிய ஹீரோயினாக உருவாக உதவியாக இருக்கும் என கருதுகிறாராம்.
ஆனால், மகள் ஆராதனாவை கவர்ச்சி நிறைந்த பாலிவுட்டில் இருந்தும், மீடியாக்களில் இருந்து விலக்கி வைக்க ஐஸ்வர்யா ராய் விரும்புகிறாராம். இது குறித்து அபிஷேக்கிடம் கேட்டதற்கு, என் மகள் என்னவாக ஆக வேண்டும் என என் மகள் தான் முடிவு செய்ய வேண்டும். அவளுக்கு எது சந்தோஷமோ, அது தான் எனக்கும் சந்தோஷம். ஆனால் ஐஸ்வர்யா, தான் தனது வாழ்க்கை, வேலை போன்றவற்றில் என்ன ஆக விரும்பினாரோ அப்படி என் மகளை ஆக்க நினைக்கிறார் என தெரிவித்துள்ளார்.