சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆலியா பட். சில தினங்களுக்கு முன்னர் இவரது அப்பாவும் இயக்குநருமான மகேஷ் பட்டை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ரூ.50 லட்சம் பணம் தர வேண்டும், இல்லையென்றால் ஆலியா மற்றும் மகேஷின் மனைவியை கொன்று விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியாவிடம் இதுபோன்ற மிரட்டல்கள் பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது...
நான் என் அப்பாவையும், போலீஸையும் அழைத்திருப்பேன், ஆனால் அதற்கான வாய்ப்புகள் எனக்கு கொடுக்கப்படவில்லை, போலீசாரே எல்லாவற்றையும் முடித்துவிட்டனர். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. பெற்றோர்கள் எப்போதும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பார்கள். அந்தவகையில் என் தந்தை எனக்கு முழு பாதுகாப்பாக இருக்கிறார். அப்படியிருக்கையில் என்னை யாரும் பயமுறுத்த முடியாது என்கிறார் ஆலியா.
ஆலியா பட், தற்போது ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற மார்ச் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.